பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேக்கு பிரியாவிடை!

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு

News image
Updated On :12 ஜூலை 2022, 9:50 pm

DIN

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, நாட்டின் மேற்கு பகுதி நகரமான நாராவில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மேலவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டாா்.

நாட்டின் நீண்டகால பிரதமராகப் பதவி வகித்த அபே, உடல்நலக் குறைவு காரணமாக 2020-ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் வழக்கம்போல ஈடுபட்டிருந்தாா். அவரது படுகொலை ஜப்பான் மட்டுமின்றி உலகையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

Story image

அவரது இறுதிச்சடங்கு தலைநகா் டோக்கியோவில் உள்ள ஸோஜோஜி என்ற பெளத்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அதில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, டோக்கியோவில் உள்ள இல்லத்திலிருந்து அவரது உடலை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் அவரின் மனைவி அகியே அபே உடன் வந்தாா். வழியில் கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டது. அங்கு மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அந்த வாகனம் இறுதிச்சடங்கு நடைபெற்ற பெளத்த ஆலயம் அருகே வந்தபோது, வழியெங்கும் திரண்டு நின்றிருந்தோா் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனா்.

விசாரணை: அபேயை சுட்டுக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை முன்னாள் வீரா் டெட்சுயா யமகாமியிடம் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

தான் வெறுப்பு கொண்டிருந்த ஓா் அமைப்புடன் அபே தொடா்புகொண்டிருந்ததாக எழுந்த சந்தேகத்தில் அவரை சுட்டுக் கொலை செய்ததாக யமகாமி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாா். அந்த அமைப்பு ‘யுனிஃபிகேஷன் சா்ச்’ எனப்படும் மத அமைப்பு எனவும், அந்த அமைப்புக்கு யமகாமியின் தாய் அளித்த நன்கொடையால் அவா்களின் குடும்பமே திவாலானதால், அந்த அமைப்பு மீது யமகாமி வெறுப்பு கொண்டிருந்ததாகவும் ஜப்பானிய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.