வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 884 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,00,279-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 29,256-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 19,31,494 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 39,529 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 1,228 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.