இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.


இலங்கையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச பதவி விலகியதையடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதன்பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.
இதையடுத்து, இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...