கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இலங்கை: சிகிச்சை பெற முடியாமல் திணறும் நோயாளிகள்

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

News image
Updated On :26 ஜூலை 2022, 9:01 am

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக பலரும் பணிக்குச் செல்வதை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் சக்கரை மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொழும்பில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் பல வார்டுகள் இருட்டாக உள்ளன என்றும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் வலியுடன் அவதிப்படுவதாகவும் , மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் பலர் நோயுடனே வீட்டிற்குத் திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.