இலங்கை: சிகிச்சை பெற முடியாமல் திணறும் நோயாளிகள்

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இலங்கை: சிகிச்சை பெற முடியாமல் திணறும் நோயாளிகள்
Updated on
1 min read

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக பலரும் பணிக்குச் செல்வதை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் சக்கரை மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொழும்பில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் பல வார்டுகள் இருட்டாக உள்ளன என்றும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் வலியுடன் அவதிப்படுவதாகவும் , மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் பலர் நோயுடனே வீட்டிற்குத் திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com