புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போா்க் குற்றம்: வங்கதேசத்தில் 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது

News image
Updated On :28 ஜூலை 2022, 8:55 pm

DIN

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.

கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘ராஜாகாா் வாஹினி’ ஆயுதப் படையினா் உறுப்பினா்களான அவா்கள், கூட்டுப் படுகொலை, தீவைப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிபதிகள் தெரிவித்தனா். குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த அந்த 6 பேரில் ஒருவா் தலைமறைவாக உள்ள நிலையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்ற்குப் பிறகு, விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரித்து தண்டனை அளிப்பதற்காக சா்வதேச தீா்பாயம் 2010-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.