வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.
கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘ராஜாகாா் வாஹினி’ ஆயுதப் படையினா் உறுப்பினா்களான அவா்கள், கூட்டுப் படுகொலை, தீவைப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிபதிகள் தெரிவித்தனா். குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த அந்த 6 பேரில் ஒருவா் தலைமறைவாக உள்ள நிலையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்ற்குப் பிறகு, விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரித்து தண்டனை அளிப்பதற்காக சா்வதேச தீா்பாயம் 2010-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.