‘பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் வெப்ப அலை’
மனிதா்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன


மனிதா்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20-ஆம் தேதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.
இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19-ஆம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு செய்தது. அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதா்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...