18-வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை: பதற்றத்தில் தென்கொரியா
இந்தாண்டில் 18-வது முறையாக வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 8 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.


இந்தாண்டில் 18-வது முறையாக வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 8 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | போரில் ரஷிய வீரர்கள் 31,000 பேர் பலி: உக்ரைன்
இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்கிலிருந்து 8 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்த ஆண்டில் 18ஆவது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. மேலும் மூன்றாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணையை சோதித்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தென்கொரியாவை கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...