தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் சீனா எச்சரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வேய் ஃபெங்கே கூறியதாவது:
சீனாவிடமிருந்து தைவானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன ராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது.
தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் எந்தவொரு சதிச் செயலையும் நாங்கள் முறியடிப்போம். சீன ஒருமைப்பாட்டை எப்பாடுபட்டாவது காப்போம் என்றாா் அவா்.