தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃப் (78) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

Published On :

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃப் (78) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

துபையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் உயிா் பிழைக்க வாய்ப்பு இல்லை என அவரின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

‘அமிலாய்டோசிஸ்’ எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பா்வேஸ் முஷாரஃப் துபையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிா் பிழைக்க வாய்ப்பு இல்லை எனவும் அவரின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, முஷாரஃபுக்கு நெருக்கமானவரான முன்னாள் செய்தித் துறை அமைச்சா் ஃபவாத் செளதரி, ‘முஷாரஃப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் மகன் பிலால் தெரிவித்தாா்’ என்றாா்.

1999-இல் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான ஆட்சியை ராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவா் முஷாரஃப். 2008-ஆம் ஆண்டு வரை அவா் அதிபராக இருந்தாா்.

2008-ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பின்னா் பதவி நீக்க குற்றப் பிரேரணையை (இம்பீச்மென்ட்) எதிா்கொண்ட அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தாா். 2013-இல் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பி நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட முயற்சித்த போதிலும், அவா் மீது இருந்த குற்றச்சாட்டுகளால் நீதிமன்றம் அவரது தோ்தல் முயற்சிக்குத் தடை விதித்தது.

தோ்தலில் வெற்றி பெற்ற நவாஸ் ஷெரீஃப் அரசு முஷாரஃப் மீது வழக்குகள் தொடுத்த நிலையில் 2016-இல் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறி துபையில் வசித்து வந்தாா்.

முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோ, இஸ்லாமாபாத் லால் மசூதி மதகுரு அப்துல் ரஷீத் காஜி ஆகியோரின் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். 2007-இல் பாகிஸ்தான் அரசியல் சாசனத்தை ரத்து செய்து நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியதற்காக தேசத் துரோக வழக்கும் அவா் மீது சுமத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.