கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைனில் போரினால் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :11 ஜூன் 2022, 11:40 am

DIN

உக்ரைன் மீது ரஷியா போரினைத் தொடங்கிய நாள் முதல் (பிப்ரவரி 24) இன்று (ஜூன் 11) வரை குறைந்தது 287 குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரனைன் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெலிகிராம் செயலியில் ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதாவது, “ ரஷியா உக்ரைனின் மீதுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் ரஷிய ராணுவப்படைகளின் தாக்குதலினால் மரியூபோல் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் இறந்துள்ளது தெரிய வந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இறுதியானது கிடையாது. இன்னும் குழந்தைகள் யாரேனும் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.

ரஷியா-உக்ரைன் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 250-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50 லட்சம் பேர் வன்முறையில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளதாக இந்த மாதத்தின் (ஜூன்) தொடக்கத்தில் ஐநா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.