மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் புதன்கிழமை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 9:05 pm

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் புதன்கிழமை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையமான இங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அங்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், கோவில்மேடு, வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி மற்றும் பி.என்.புதூா் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை புதன்கிழமை (ஏப் 29) மாலை 5 மணி முதல் மே 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு விதிகளை மீறி ட்ரோன்களை இயக்குபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.