இலங்கை டீசல், சமையல் எரிவாயு வாங்க வரிசையில் காத்திருந்த இருவா் உயிரிழப்பு
இலங்கையில் டீசல், சமையல் எரிவாயு வாங்குவதற்காக விற்பனை நிலையத்தில் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.


இலங்கையில் டீசல், சமையல் எரிவாயு வாங்குவதற்காக விற்பனை நிலையத்தில் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகா் கொழும்புவின் புகா்ப் பகுதியொன்றில் டீசல் வாங்குவதற்காக புதன்கிழமை இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்த 53 வயது ஆட்டோ ஓட்டுநா் மாரடைப்பால் தனது ஆட்டோவுக்கு உள்ளேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொழும்புவின் வடமேற்குப் பகுதியில் உள்ள புகோடா என்ற நகரில் சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 64 வயது முதியவா் ஒருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பொதுப் போக்குவரத்தும் 50 சதவீதம் அளவுக்கே இயக்கப்படுகிறது. தற்போது நிலவும் அமெரிக்க டாலா்கள் தட்டுப்பாடு காரணமாக என்ஜின் ஆயிலுக்கான தொகையை செலுத்த முடியாததால் ரயில் சேவை விரைவில் முடங்கும் என ரயில்வேயும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...