தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி (விடியோ)

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றாா்.

News image
Updated On :28 ஜூன் 2022, 9:38 am

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றாா்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, உலகத்தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடினேன். ஜி7 மாநாட்டில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கதாக அமைந்தது. உலகம் பல்வேறு நன்மைகளை அடையும் வகையில், பல சர்வதேச சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜொ்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இதற்காக அவா் கடந்த சனிக்கிழமையன்று ஜொ்மனி புறப்பட்டுச் சென்றாா்.

இந்தப் பயணத்தின்போது ஜி7 நாடுகளின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்ட  ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவா்களையும் பிரதமா் மோடி சந்தித்தார்.

இன்று ஜொ்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டார் பிரதமா் மோடி. அண்மையில் மறைந்த அந்நாட்டின் முன்னாள் அதிபா் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் அங்குச் செல்கிறார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத்தேர்வு செய்யப்பட்டுள்ள ஷேக் மொஹம்மது பின் சயீத் அல் நயானை சந்தித்து மோடி வாழ்த்துத் தெரிவிக்கவிருக்கிறார். அதையடுத்து அந்நாட்டுத் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

மனிதகுலத்தைப் பாதிக்கும் முக்கியமான சா்வதேச விவகாரங்களில் சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும்விதமாக, பிற ஜனநாயக நாடுகளான ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜொ்மனி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.