8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குவாட் தலைவர்கள் இன்று சந்திப்பு...உக்ரைன் குறித்து விவாதிக்கப்படுமா?

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவாட் தலைவர்கள் சந்திப்பு

Published On :1 பிப்ரவரி 2024, 2:03 pm IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்ளும் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ளவுள்ளார். இணையம் வழியாக இது நடைபெறவுள்ளது.

கடைசியாக, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வாஷிங்டனில் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறவுள்ள தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தலைவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர இந்த மெய்நிகர் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும் அவர்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததையடுத்து நடைபெறும் முதல் குவாட் மாநாடு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள், ரஷியாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. ஆனால், இந்திய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

புதின் தலைமையிலான ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உலக நாடுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்துவருகிறது. ரஷியாவை தனிமைப்படுத்தக் கோரிவரும் ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கு உதவி அளித்துவருகிறது. இதேபோல, ரஷிய நிறுவனங்களின் மீது ஜப்பான் தடை விதித்துள்ளது. உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்று கொள்ள தயார் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாற்று கருத்து நிலவிவருகிறது. குறிப்பாக, ரஷியாவுடன் வரலாற்று ரீதியாகவே நீண்ட காலமாக இந்தியா நல்ல உறவை பேணிவருகிறது. அதே சமயத்தில், அமெரிக்கா உடனான உறவு கடந்த 20 ஆண்டுகளில் பெரும் வளர்த்தி அடைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.