விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

குவாட் தலைவர்கள் இன்று சந்திப்பு...உக்ரைன் குறித்து விவாதிக்கப்படுமா?

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

குவாட் தலைவர்கள் சந்திப்பு

Updated On :3 மார்ச் 2022, 12:44 pm IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்ளும் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ளவுள்ளார். இணையம் வழியாக இது நடைபெறவுள்ளது.

கடைசியாக, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வாஷிங்டனில் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறவுள்ள தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தலைவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர இந்த மெய்நிகர் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும் அவர்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததையடுத்து நடைபெறும் முதல் குவாட் மாநாடு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள், ரஷியாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. ஆனால், இந்திய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

புதின் தலைமையிலான ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உலக நாடுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்துவருகிறது. ரஷியாவை தனிமைப்படுத்தக் கோரிவரும் ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கு உதவி அளித்துவருகிறது. இதேபோல, ரஷிய நிறுவனங்களின் மீது ஜப்பான் தடை விதித்துள்ளது. உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்று கொள்ள தயார் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாற்று கருத்து நிலவிவருகிறது. குறிப்பாக, ரஷியாவுடன் வரலாற்று ரீதியாகவே நீண்ட காலமாக இந்தியா நல்ல உறவை பேணிவருகிறது. அதே சமயத்தில், அமெரிக்கா உடனான உறவு கடந்த 20 ஆண்டுகளில் பெரும் வளர்த்தி அடைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.