சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மரியுபோல் மக்கள் 

உக்ரைனின், மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக துணை மேயர் கூறியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :12 மார்ச் 2022, 9:49 am

DIN

உக்ரைனின், மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக துணை மேயர் கூறியுள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள்,  தற்போது மரியுபோல் நகரையும் சூறையாடி வருகிறது. சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான மரியுபோலில் ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. 

இதுகுறித்து துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் கூறுகையில்,

மரியுபோல் நகரத்தில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். உணவு, தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்சாரம்,  நீர் விநியோகம், வெப்பமாக்கல் இல்லாமல் தவித்து வருகின்றனர். நகரத்தை விட்டு வெளியேற முடியாமல் பிணைக் கைதிகள் போல் சிக்கியுள்ளனர். 

செயற்கைக்கோள் படங்கள் வைத்து நகரத்தின் அழிவின் அளவை தெரிந்துகொள்ள முடிகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டன, வணிக மையம் மற்றும் ஒரு மகப்பேறு மருத்துவமனை தகர்க்கப்பட்டுள்ளன. 

மேலும், முற்றுகையிடப்பட்ட வடக்கு நகரமான செர்னிஹிவின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. அங்குத் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகின்றது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது, நகரின் பெரும்பாலான பகுதிகள் வெளிச்சம் மற்றும் தகவல் தொடர்பு இல்லாமல் உள்ளது.

ரஷியப் படைகளால் சூழப்பட்டுள்ள மரியுபோல் நகரம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.