மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சீனாவில் மீண்டும் கரோனா: 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சம்

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2022, 5:23 am


சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் நேற்றைய (சனிக்கிழமை) தினத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அந்த நாட்டில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்லது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, ஷாங்காய் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு வடகிழக்கு நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியா எல்லையிலுள்ள யான்ஜி பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிதளவில் பாதிப்பு அதிகரித்தபோது பொதுமுடக்கங்கள், பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்டவைக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு நோய்த் தொற்று இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை மற்றும் தொற்று பாதிப்பின் அறிகுறி இல்லாத் தன்மை காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.