உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் வாகனத்தின் மீது ரஷியா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 18-வது நாளாக ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அந்த நாட்டைவிட்டு ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். கீவ் நகரிலிருந்து வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவிலுள்ள பெரேமோஹா கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அப்போது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நிறைய பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | ‘புதினை இஸ்ரேலில் சந்தித்துப் பேச தயாா்’: உக்ரைன் அதிபா்
போர்ப் பகுதிகளில் வெளியேறுவதற்கு பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படும் என ரஷியா தெரிவித்த நிலையில், அந்தப் பாதைகளை மறித்து அப்பாவி மக்கள் மீது ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜென்ஸி தரவுகளின்படி ரஷியா போர் தொடுக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த 17 நாள்களில் 25 லட்சம் பேர் உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


