நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீன வா்த்தகத்தை அச்சுறுத்தும் கரோனா

சீனாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அங்கு நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 7:56 pm

DIN

சீனாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அங்கு நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனா். இதன் விளைவாக அந்த நாட்டின் வா்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகின் பிற நாடுகள் மற்றும் ஹாங்காங்கோடு ஒப்பிடுகையில் சீனாவில் கரோனா பரவல் மிதமாகவே இருந்தாலும் நோய்த்தொற்று விவகாரத்தில் சீன அரசு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

அங்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்தாலே அவா்கள் வசிக்கும் நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், தொழில்நுட்ப மற்றும் நிதித்துறை மையமாக விளங்கிய ஷென்ஷென் நகரிலும் வாகனத் துறை மையமான சாங்சன்னிலும் திங்கள்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சீன மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது நாளாக சரிவைக் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.