தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு

கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

News image

கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு

Updated On :16 மார்ச் 2022, 5:42 pm IST


இஸ்லாமாபாத்: கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருமணம், உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சந்தைகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளுக்கும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கிக் கொள்ளப்படுவதால், கரோனா பேரிடர் முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது, அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, சூழ்நிலைக்கு ஏற்ப மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.