டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த சீனா முடிவு 

சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சீன நாட்டின் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:43 am

DIN

சீனா: சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சீன நாட்டின் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, பெட்ரோல் விலை டன்னுக்கு 750 யுவான் (USD 118.28) உயர்த்தப்படும் என்றும், டீசல் விலை 720 யுவான் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஹுவா கூறுவது போல் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீனா பெட்ரோலியம்-கெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் சைனா நேஷனல் ஆஃப்ஷோர் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பெரிய எண்ணெய் நிறுவனங்களை எண்ணெய் உற்பத்தியை பராமரிக்கவும், நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்தை எளிதாக்கவும் சீன அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உக்ரைனில் ரஷியாவின் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக, செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்தது என்று தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மேலும், கரோனா தாக்கம் காரனமாக சீன மாகாணங்கள், பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட நகரங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன, நகரங்களுக்கு இடையிலான பயணம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.