இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலங்கையில் பேருந்து விபத்து: 32 பள்ளிக் குழந்தைகள் காயம்

இலங்கையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:43 am

DIN

இலங்கையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

இலங்கையின் வலஸ்முல்ல பகுதியில் பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற பேருந்து திடீரென மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக வலஸ்முல்ல பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்விச் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 52 இருசக்கர வாகன விபத்துகளில் 53 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.