சீனா: விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்திற்குள்ளான விமானம்
விபத்திற்குள்ளான விமானம்

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் 132 பேரும் பலியானதாக சீன அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், விபத்திற்கான காரணங்களை அறிய கருப்புப் பெட்டி அவசியம் என்பதால் அதை இரண்டு நாள்களாகத் தேடி வந்த நிலையில், இன்று விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடப்பதற்கு முன் விமானிகள் பேசிய பதிவை வைத்து விபத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்பதால் மேலும் ஒரு கருப்புப் பெட்டியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com