தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இலங்கை: வருமானம் குறைவாகவுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

இலங்கையில் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 மே 2022, 11:59 am

DIN

இலங்கை: இலங்கையில் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், உணவுப் பொருள்கள் என அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டு பல்வேறு அரசியல் மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து சிறப்பு நிதியுதவி வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை மே மற்றும் ஜூலை மாதங்களிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.