தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெய்ஜிங்கில் பொதுப் போக்குவரத்து நிறுத்தம்: காரணம்?

பெய்ஜிங்கில் டஜனுக்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

News image

பெய்ஜிங்கில் பொதுப் போக்குவரத்து நிறுத்தம்: காரணம்?

Updated On :4 மே 2022, 8:09 am

DIN

பெய்ஜிங்: கரோனா பரவல் காரணமாக ஒரு மாத காலத்துக்கும் மேல் ஷாங்காயில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பெய்ஜிங்கில் டஜனுக்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

சீனத்தின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள 40க்கும் மேற்பட்ட சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 பேருந்து வழித்தடங்களில் பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான ரயில்நிலையங்கள் பெய்ஜிங்கின் சோயாங் மாவட்டத்துக்குள்பட்டவையாக உள்ளன.

பெய்ஜிங்கில் மீண்டும் மிகப்பெரிய கரோனா சோதனை தொடங்கியிருக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள 12 மாவட்டங்களில் இரண்டாவது முறையாக மூன்றாம் சுற்று கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த வாரமும் மிகப்பெரிய அளவில் மூன்று சுற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்ட, வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.