இலங்கை நாடாளுமன்ற துணைத் தலைவராக அஜித் ராஜபட்ச தேர்வு

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய துணைத் தலைவராக அஜித் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம்(கோப்புப்படம்)
இலங்கை நாடாளுமன்றம்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய துணைத் தலைவராக அஜித் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இதில், நாடாளுமன்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் அஜித் ராஜபட்ச மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், அஜித் ராஜபட்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும், ரோஹிணிக்கு எதிராக 78 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, இந்த தேர்தலில் அஜித் ராஜபட்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com