சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வரவேற்பில் சொக்கிப்போனார் மோடி: ஜப்பான் மொழியில் சுட்டுரைப் பதிவு

க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.

News image
வரவேற்பில் சொக்கிப்போனார் மோடி: ஜப்பான் மொழியில் சுட்டுரைப் பதிவு
Updated On :23 மே 2022, 11:56 am

DIN

க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.

ஜப்பானின் டோக்யோவை வந்தடைந்த மோடிக்கு, ஜப்பான் வாழ் இந்தியர்கள் கோலாகல வரவேற்பை அளித்தனர். ஜப்பான் வாழ் மக்கள் மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

Story image

ஹர் ஹர் மோடி.. மோடி மோடி.. வந்தே மாதரம் மற்றும் பாரத மாதா கி ஜெய் என ஜப்பான் வாழ் இந்தியர்கள் முழக்கமிட்டவாறு பிரதமர் மோடியை வரவேற்றது மெய்மறக்கச் செய்தது.

அது மட்டுமா.. அங்கிருந்த சிலர் இந்தியாவின் சிங்கமே (பாரத் மாதா கா ஷேர்) என்றும் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷம் எழுப்பினர்.

இந்திய மக்கள் தனக்களித்த வரவேற்பு குறித்து நன்றியுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். இது குறித்து ஜப்பான் மொழியிலும் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார் மோடி.

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் 3-ஆவது உச்சி மாநாடு, டோக்கியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி 23-ஆம் தேதி ஜப்பான் செல்கிறாா். 2 நாள்கள் ஜப்பானில் தங்கியிருக்கும் அவா், 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

க்வாட் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறாா். இதுதவிர, ஜப்பானைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா்; இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தித்து உரையாடவுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.