தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

அந்நிய செலாவணி தட்டுப்பாடு: லெபனானில் மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்

அந்நிய செலாவணி தட்டுப்பாட்டினால் லெபனானில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதமாவதால் அவை மூடப்படும்  அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 

கோப்புப்படம்

Published On :

அந்நிய செலாவணி தட்டுப்பாட்டினால் லெபனானில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதமாவதால் அவை மூடப்படும்  அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 

லெபனானில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டை அந்த நாட்டு செய்தி நிறுவனம் எல்நாஷா உறுதி செய்துள்ளது. 

அந்நாட்டில் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்கான அமெரிக்க டாலர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு  காரணம் லெபனானின் மத்திய வங்கியின் சார்பில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே ஆகும். 

பணத்தட்டுப்பாட்டின் காரணமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்களின் தேவைகளையும் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் லெபனானின் மத்திய வங்கிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் முக்கியத் துறையான மருத்துவத்துறையில் ஏற்படும் இடையூறு நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகின்றனர். அதன் காரணத்தினால் லெபனானின் மத்திய வங்கி மருத்துவமனைக்கான நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடு தனிநபர்களை மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.