வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா- தென் கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | வாட்ஸ்ஆப் குழுவில் எத்தனை பேர் இருக்கலாம்? புதிய அறிவிப்பு வெளியீடு
புதன்கிழமை தொடர்ச்சியாக 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்தது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்கொரியா மற்றும் ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஏவுகணை பறந்ததாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் சோதிக்கப்பட்ட நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் இவ்வகை ஏவுகணை சோதனை வெற்றி பெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து நடைபெற்றும் வரும் அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வரைவு எங்கே? காங்கிரஸ் கேள்வி!
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


