வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

'இதைத் தொடர விரும்புகிறேன்'- ரஷிய எண்ணெய் இறக்குமதி குறித்து ஜெய்சங்கர் 

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நவம்பா் 7-ஆம் தேதி ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :8 நவம்பர் 2022, 4:15 pm

DIN

வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நவம்பா் 7-ஆம் தேதி ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை அவா் சந்தித்துப் பேசினார். 

ரஷியா- உக்ரைன் போர் தொடா்ந்து 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவுடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் படிப்படியாகக் குறைத்துக் கொண்டதால், இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷியா முன்வந்தது. இந்தியாவும் அதனை ஏற்று ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது. 

“எண்ணெய் விநியோகச் சிக்கலைப் பொறுத்தவரை, எரிசக்தி சந்தையில் அழுத்தம் உள்ளது. ஆனால் உலகின் 3வது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நுகர்வோர் என்ற வகையில், இந்திய நுகர்வோர் மிகவும் சாதகமான விதிமுறைகளில் இவைகளை பெறுவதை உறுதி செய்வது எங்கள் அடிப்படைக் கடமையாகும். 

ஆப்கானிஸ்தானின் நிலைமையை உலகம் மறந்துவிடக் கூடாது. மனிதாபிமான சூழ்நிலை உள்ளது. தடுப்பூசிகள் மற்றும் உணவுகளை வழங்குவதில் இந்தியா முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது.

நிலையான மற்றும் தொடர்ச்சியான மறு சமநிலைப்படுத்தல் மூலம் உலகம் அதிக பல துருவங்களை நோக்கி நகர்கிறது. இது ரஷியா மற்றும் இந்தியா உரையாடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். உக்ரைன் மோதல் முக்கிய அம்சமாக இருந்தது. ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் தெரிவித்தது போல், இது போரின் சகாப்தம் அல்ல. உலகளாவிய பொருளாதாரம், எங்கும் குறிப்பிடத்தக்க மோதலுக்காக, மற்ற இடங்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது” என அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.