இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

எகிப்து: கால்வாயில் கவிழ்ந்த பேருந்து , 21 பேர் பலி

எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:49 am

DIN

எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி டாக்டர்.ஷெரீஃப் மக்கீன் கூறியதாவது: இந்த விபத்து எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 100 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள தக்லியா மாகாணத்தில் நடந்துள்ளது. விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி முஹமது ஹாதி கூறியதாவது: பேருந்தின் ஓட்டுநர் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இது போன்ற விபத்துகள் எகிப்தில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. வேகமாக வாகனங்களை இயக்குவதே விபத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.