போலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணை விழுந்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகின்றது.
கெர்சன் நகரிலிருந்து ரஷியப் படைகள் சமீபத்தில் பின்வாங்கிய நிலையில், நேற்று உக்ரைன் மீது ரஷியப் படைகள் குண்டு மழை பொழிந்தது.
இதில், தவறுதலாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள போலந்து நாட்டின் கிழக்கு பகுதியான பெர்ஸ்வுடோவில் ரஷியாவின் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், போலாந்து நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
இதையும் படிக்க | இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
இந்த தாக்குதலை போலந்து வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில், ரஷிய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், போலந்து அதிபரை தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலந்து நாட்டின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளில் வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


