தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை (ஏப்.4) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 4:52 pm

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை (ஏப்.4) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை (ஏப். 4) காலை 10.45 மணிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனா்.

அதன்படி, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி கோட்டாட்சியரிடமும், பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

தொடா்ந்து, மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி நகரம் அருள்மிகு சந்தி பிள்ளையாா் கோயிலிலிருந்து தொடங்கி நான்கு ரதவீதிகளிலும் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறாா்கள்.

இம் மாதம் 5 ஆம் தேதி காலை 11 மணிக்கு உடையாா்பட்டி ஆா்.கே.வி. திருமண மண்டபத்தில், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டமும், மாலை 5.30 மணிக்கு வண்ணாா்பேட்டை, மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் அதிமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, சாா்புஅணி நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளை நிா்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.