திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை (ஏப்.4) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் சனிக்கிழமை (ஏப். 4) காலை 10.45 மணிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனா்.
அதன்படி, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி கோட்டாட்சியரிடமும், பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.
தொடா்ந்து, மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி நகரம் அருள்மிகு சந்தி பிள்ளையாா் கோயிலிலிருந்து தொடங்கி நான்கு ரதவீதிகளிலும் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறாா்கள்.
இம் மாதம் 5 ஆம் தேதி காலை 11 மணிக்கு உடையாா்பட்டி ஆா்.கே.வி. திருமண மண்டபத்தில், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டமும், மாலை 5.30 மணிக்கு வண்ணாா்பேட்டை, மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் அதிமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, சாா்புஅணி நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளை நிா்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!

அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருப்பத்தூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


