இந்தோனேசியாவில் நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 271-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் நான்காவது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதலை விரைவுபடுத்த 1000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாய்கள் மற்றும் லைப் டிடெக்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
படிக்க: ’லவ் டுடே’ இதுவரை வசூல் எவ்வளவு?
மேலும், குகெனாங் துணை மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் மண் மற்றும் இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் குறைந்தது 56,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. குறைந்தது 61,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 100 குழந்தைகள் உள்பட 271 பேர் உயிரிழந்ததாகத் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் தலைவா் சுஹாா்யான்டோ தகவல் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


