ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி 271-ஆக உயர்வு

இந்தோனேசியாவில் நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 271-ஆக உயர்ந்துள்ளது. 

News image

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி 271-ஆக உயர்வு

Updated On :24 நவம்பர் 2022, 12:40 pm IST

இந்தோனேசியாவில் நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 271-ஆக உயர்ந்துள்ளது. 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள்  நான்காவது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதலை விரைவுபடுத்த 1000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாய்கள் மற்றும் லைப் டிடெக்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், குகெனாங் துணை மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் மண் மற்றும் இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இடிபாடுகளில் குறைந்தது 56,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. குறைந்தது 61,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 100 குழந்தைகள் உள்பட 271 பேர் உயிரிழந்ததாகத் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் தலைவா் சுஹாா்யான்டோ தகவல் தெரிவித்துள்ளார். 

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.