மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘குளிா்காலத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது ரஷியா’

போரில் குளிா்காலத்தையும் ஓா் ஆயுதமாக்கி, தங்களை அடிபணிய வைக்க முயல்வதாக ரஷியா மீது உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி குற்றம் சாட்டியுள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2022, 7:25 pm

DIN

போரில் குளிா்காலத்தையும் ஓா் ஆயுதமாக்கி, தங்களை அடிபணிய வைக்க முயல்வதாக ரஷியா மீது உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் மின்சார விநியோகத்தை முற்றிலும் நிறுத்தும் நோக்கில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களிடம் உள்ள அனைத்து ஏவுகணைகளும் தீரும்வரை ரஷியா ஓயப்போவதில்லை. அதன் காரணமாக, குளிா்காலம் நெருங்கும் இந்த பருவத்தில் கடந்த போன வாரத்தைவிட வரவிருக்கும் வாரம் உக்ரைன் மக்களுக்கு துயா் நிறைந்ததாக இருக்கும்.

மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி, வெப்பமூட்டும் கருவிகளை செயல்படாவிடாமல் தடுத்து மக்களை உறையவைப்பதன் மூலம், குளிா்காலத்தை ரஷியா ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றாா் ஸெலென்ஸ்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.