47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘ஈரான் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் 108 போ் பலி’

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில்

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:23 pm

DIN

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை 108 போ் பலியாகியுள்ளதாக ‘ஈரான் மனித உரிமைகள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலிருந்து செயல்பட்டு வரும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: ஈரானில் கடந்த 4 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 108 போ் பலியாகினா். இது தவிர, சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற மோதலில் மேலும் 93 பேரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கலாசார காவலா்களால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22), கோமா நிலைக்குச் சென்று, பின்னா் உயிரிழந்தாா். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.