/

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்: ஜோ பைடன் 

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

News image
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:34 am

DIN

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சனிக்கிழமையன்று(அக்.15) நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பாகிஸ்தானை "எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று" என்று கூறினார்.

சீனா மற்றும் ரஷியா தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி பைடன் பேசிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தான் குறித்த கருத்துக்களை தெரிவித்தார்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தானைக் கருதுவதாக பைடன் கூறினார்.

மேலும், உலகை முன்னெப்போதும் இல்லாத இடத்திற்கு இட்டுச் செல்லும் திறன் அமெரிக்காவிற்கு உள்ளது என்பதை பைடன்  வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.