குறைவான விகிதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே, புதிய போலியோ பாதிப்புகளுக்கு காரணமாகும். கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், போலியோவுக்கு எதிரான பிரசாரங்கள் 4 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், சில நாடுகளில் போலியோ பரவல் அதிகரித்துள்ளது. உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் கரோனா பெருந்தொற்று எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போலியோ தொற்றை உலகில் இருந்து நீக்கும் வரை போலியோ தொற்று இல்லாத நாடுகளும் போலியோவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். போலியோவுக்கு எதிராக வழங்கப்படும் சொட்டு மருந்து கடந்த 1988-இல் இருந்து உலகம் முழுவதிலுமான பாதிப்பை 99 சதவீதத்துக்கு குறைத்துள்ளது என அவா் தெரிவித்தாா்.