எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
நிலவுக்கு மீண்டும் வீரர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் நாசா அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிக்க | அமெரிக்காவில் வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி
இந்த பிரமாண்ட திட்டத்தின்படி ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்திய நேரப்படி இரவு 11:47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.