அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தைத் தகர்க்கப் போவதாகக் கூறி கடத்தப்பட்ட விமானத்திலிருந்து மர்ம நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | ‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஏழைகளுக்காக உழைப்பதில்லை’: அமித்ஷா
கடத்தப்பட்ட விமானத்தைக் கொண்டு வணிக வளாகத்தை சுற்றி வட்டமிட்டுவரும் அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகப் பகுதியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
விமானத்தைக் கடத்திய நபர் யார்? எதற்காக மிரட்டல் விடுக்கிறார்? என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.