தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் ஆர்டெமிஸ் ராக்கெட் நிறுத்திவைப்பு

தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.
ஆர்டெமிஸ் ராக்கெட்
ஆர்டெமிஸ் ராக்கெட்
Updated on
1 min read

தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.

நிலவுக்கு மீண்டும் வீரர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் நாசா அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.

இந்த பிரமாண்ட திட்டத்தின்படி ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் இறுதி நேரத்தில் மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com