அமெரிக்காவில் விமானம் மூலம் வால்மார்ட் அங்காடியைத் தாக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ள விமானியிடம் காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மிசிமிசிப்பி மாகாணத்தில் உள்ள டுபேலா நகரில் இன்று அதிகாலை 5 மணி முதல்(இந்திய நேரப்படி மாலை 4 மணி) கடந்த 3 மணி நேரமாக இளைஞர் ஒருவர் விமானத்தில் நகரைச் சுற்றி வந்துள்ளார்.
இதையும் படிக்க: உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா!
அவரைத் தொடர்பு கொண்டபோது, அங்கிருக்கும் வால்மார்ட் அங்காடியில் விமானத்தை மோதச்செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்நகர காவல்துறை உடனடியாக அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் விமானத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கும் இளைஞரிடமும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.