மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமெரிக்கா: விமானம் மூலம் தாக்குதல் மிரட்டல் விடுத்தவர் கைது

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த மர்மநபர் கைதுசெய்யப்பட்டார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 4:25 pm

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த மர்மநபர் கைதுசெய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தைத் தகர்க்கப் போவதாகக் கூறி கடத்தப்பட்ட விமானத்திலிருந்து மர்ம நபர் எச்சரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், கடத்தப்பட்ட விமானத்தைக் கொண்டு வணிக வளாகத்தை சுற்றி வட்டமிட்டுவந்த அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை தரையிறக்கியபோது இளைஞர் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.

எதற்காக தாக்குதல் மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.