வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த மே மாதத்திலிருந்து பெய்து வரும் பருவ மழை, மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 89-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
தொடா்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் சிலா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, கடந்த மே மாதம் மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 36 போ் காயமடைந்துள்ளனா்.
மேலும், சுமாா் 20,000 வீடுகள் முழுமையாகவும் 30,000 வீடுகளில் ஒரு பகுதியிலும் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.