மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்' - உக்ரைன் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 5:09 am

DIN

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

'உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் அதற்கு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.