தீவிர பரவும் ஒமைக்ரானிடமிருந்து தப்புவதற்காக, பிரிட்டன் பள்ளிகளில் மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் வகுப்புகளுக்கு வரும் மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவில் ஆசிரியா்கள் உள்படுத்தப்படவில்லை.
பிரிட்டனில் சனிக்கிழமை மட்டும் 1.62 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 14,8,624 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.