கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

துபை லாட்டரியில் ரூ.50 கோடி வென்ற கேரள ஓட்டுநர்

புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான லாட்டரி பரிசு சீட்டில் கேரளத்தை சேர்ந்தவருக்கு ரூ.50 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2022, 2:15 pm

DIN

புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான லாட்டரி பரிசு சீட்டில் கேரளத்தை சேர்ந்தவருக்கு ரூ.50 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் துபையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் கடந்த 10 ஆண்டுகளாக துபையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான மெகா லாட்டரி பரிசு சீட்டை வாங்கிய ஹரிதாஸுக்கு முதல்பரிசாக இந்திய மதிப்பில் ரூ.50 கோடி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

232976 எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.50 கோடி அறிவிக்கப்பட்டது. ரூ.50 கோடி பரிசுத் தொகையைப் பெற்ற ஹரிதாஸ் மகிழ்ச்சியில், “இதனை நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரிதாஸைத் தொடர்ந்து இரண்டாவது பரிசான ரூ.4 கோடியை அஷ்வின் அரவிந்தாக்‌ஷன் என்பவரும், மூன்றாவது பரிசு ரூ. 20 லட்சத்தை தீபக் ராமசந்த் பாட்டியா என்பவரும் வென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.