Enable Javscript for better performance
அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி

    By DIN  |   Published On : 24th January 2022 03:37 PM  |   Last Updated : 24th January 2022 04:00 PM  |  அ+அ அ-  |  

    Increasing cancer risk in climate change

    அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி

    அரிதினும் அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் முடி வளர்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கேமரூன் நியூஸோம். ஒரு குழந்தைக்க தாயான இவருக்கு ஏற்பட்ட அரிதான புற்றுநோயை கண்டுபிடிக்கவே மருத்துவர்களுக்கு பல காலம் ஆனது.

    இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

    நாக்கில் உருவான ஒரு வெள்ளைப் புள்ளி என்ன என்று கண்டுபிடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்குள் அவரது நாக்கில் உருவான புற்றுநோய் நான்காவது கட்டத்தை எட்டிவிட்டிருந்தது. இந்த அரிதான புற்றுநோயால் சாப்பிடவோ பேசவோ இயலாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய் என்று கண்டறிவதற்கு முன்பு, அவருக்கு சாதாரண ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. எனினும் அவை பலனளிக்கவில்லை.

    பிறகுதான், 2013ஆம் ஆண்டில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவர், நியூசோனாவுக்கு ஏற்பட்டிருப்பது அரிதான தோல் புற்றுநோய் என்பதை.

    ஆரம்பத்தில் புற்றுநோய் குறித்து அறிந்து அவரும் அவரது குடும்பமும் கலங்கித்தான் போயினர். பிறகு அதற்கெதிரான தனது போராட்டத்தை உத்வேகத்துடன் தொடங்கினார் நியூஸோனா.

    அவருக்கு முதலில் கீமோதெரபி அளிக்கப்பட்டு, பிறகு, நாக்கிலிருந்து புற்றுநோய் பாதித்த பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கு  மாற்றாக, அவரது தொடைப் பகுதியின் தோல் நாக்கில் வைத்து தைக்கப்பட்டது.

    அதன்பிறகும் ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபிகள் கொடுக்கப்பட்டது. அவருக்கு பேசவும், சாப்பிடவும் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

    இது குறித்துஅவர் கூறுகையில், எனது நாக்கின் ஒரு பகுதி எந்த உணர்வுமில்லாமல் ஒரு தோல் பகுதியைக் கொண்டிருப்பதாக உணர்வேன். ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்று கொண்டு எனது நாக்கை உற்றுப் பார்த்த போது, தொடையிலிருந்து வைத்த தோல் பகுதியில் சிறு முடிகள் வளர்ந்திருப்பதைக் கவனித்தேன் என்கிறார்.

    அவர் புற்றுநோயிலிருந்து பூரணமாகக் குணமடைந்து விட்டதாகவும், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp