இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் அதிபர் மாளிகையை மக்கள் இன்று முற்றுகையிட்டதால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தப்பியோடினார். இதனிடையே அசாதாரண சூழலின் மத்தியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க- அணி மாறினார் சஹா
இத்தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவரது வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
இதனால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. பதவி விலகப்போவதாக ரணில் ஏற்கெனவே அறிவித்த நிலையில், அவரது வீட்டிற்கு தற்போது போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

