இலங்கை அதிபர் கோத்பய ராஜபட்ச பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 3740 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் இரண்டாவது கப்பல் நாளை திங்கள்கிழமை கொழுப்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
முதலாவது சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கோடிக்கணக்கில் பணம்!
3200 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் வரும் 15 ஆம் தேதி இலங்கை வந்தடையவுள்ளது. ஜூலை மாதத்திற்காக சுமார் 33 ஆயிரம் மெட்ரிக் டன் எரிவாயுவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை(ஜூலை 12) முதல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் சமையல் எரிவாயு நெருக்கடி முடிவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அதிபர் கோத்தய ராஜபட்சவிடம் தெரிவித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக கோத்தபய ராஜபட்ச நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் சனிக்கிழமை அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக்கோரி மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய, பிரதமர் பதவியில் இருந்து ரணிலும் பதவி விலகினால், இடைக்கால அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”அட்லி படம் போல...!” அந்த மொழிதான் அவர்களுக்குப் புரியும்! முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



