நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்ற தாக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்குநாள் மோசமான பாதிப்புகளை சந்தித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 

News image

வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:20 pm IST

காலநிலை மாற்ற தாக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்குநாள் மோசமான பாதிப்புகளை சந்தித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆஸ்திரேலிய நாடானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறியப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அரிய வகை விலங்கினங்களும், ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கேற்ற தன்மையுடன் கூடிய சிறப்புவாய்ந்த உயிர்வாழ்விகளும் வசித்து வருகின்றன. சமீபத்திய காலத்தில் அதிகரித்துவரும் காலநிலை மாறுபாடு சிக்கல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நாடு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் விலங்கினங்கள் அழிந்துவருவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காலநிலை மாற்றத்தால் அழியும் தருவாயில் உள்ள வன உயிர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டின் அறிக்கையிலிருந்து 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

அந்த நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் லிபரல் கூட்டணியைத் தோற்கடித்து லேபா் கட்சி வெற்றி பெற்ற நிலையில் காலநிலை மாற்ற சிக்கலுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆளும் தொழிலாளர் கட்சி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2005ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கார்பன் அளவில் 43 சதவிகிதத்தை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

அதன்படி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ வன உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.